Friday 2 April, 2010

கலைஞர் காப்பிட்டு திட்டம்

கலைஞர் காப்பிட்டு திட்டம்:

ஏழை எளிய மக்களுக்கு நவீன தரமான நல்ல சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .

இப்போது மக்களுக்காக காப்பீட்டு திட்டத்தை கலைஞர் தமிழக முதல்வர் தமிழக மக்கள் வரி பணத்தில் செயல்படுத்தி உள்ளார்.550 கோடி வருடத்திற்கு ஒரு தனியார் காப்பிடு நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது .அந்த 550 கோடிக்கு வட்டி 55 கோடி ஆண்டுக்கு .55000 பேருக்கு மேல் காப்பீட்டு கொடுக்கலாம் தலா ஒரு லட்சம் விதம் . கண்டிப்பாக ஆண்டுக்கு 30000 பயனாளிக்கு கீல் தான் பயன் பெறுவர் .எந்த தனியார் நிறுவனமும் லாபம் இன்றி செயல்படாது.
550 கோடியை அரசு வங்கி வைத்து பாதிக்க பட்டவருக்கு கொடுக்கலாம் .
ஒரு மாதத்துக்கு 1100 பேர் அவர்கள் செலவு 1100*100000 = 11 கோடி அப்படி என்றால் 12 மாதம் 11 கோடி *12 =132 கோடி .தமிழக அரசு தனியார் காப்பிடு நிறுவனத்திடம் இடம் கொடுத்த தொகை 550 கோடி .வருடத்துக்கு காப்பிடு நிறுவனத்தின் லாபம் 418 கோடி +550 கோடி பணத்துக்கான வட்டி. அனேகமாக௦ 470 கோடிக்கு மேல் .
தகவல் அறியும் உரிமை கீல் அரசு எத்தனை பயனாளிக்கு எவளவு பணம் கொடுகபட்டுளது என்று கேட்டு பெற்று கொள்ளலாம்.
கலைஞர் தமிழக முதல்வர் 11 /04/2010 அன்று அறிவுப்பு 1 கோடி 44 லட்சம் மக்கள் சேர்ப்பு .69278 பேர் பயன் 200 கோடி ரூபாய் .



பயனாளி அந்த பணத்தை பெருவதுற்கு உள்ள எத்தனை பேருக்கு எவளவு கையுட்டம் கொடுக்க வேண்டி இருக்கும் ?.
அனைத்து பயனாளிக்கும் அட்டை கொடுக்க ஆகும் செலவு .அரசு இயத்ரம் செயல்பாடு .இது எல்லாம் கணக்கு இட்டால் .
அரசு அட்டை கொடுக்க காரணம் மக்கள் இடம் பரிசு சிட்டு கொடுப்பது போல் .தங்களுக்கு ஒரு லட்சம் பரிசு விழுத்தது போல் .
1 .அட்டை பெற வேண்டும்
2 சுகவீனம் வர வேண்டும்
3 .அரசு கூறிய நோய் வர வேண்டும்
4 .அரசு கூறிய மருத்துவமை சிகச்சை பெற வேண்டும்
5 .காப்பிடு தொகைக்கு மேல் செலவு பண்ண திறன் இருக்க வேண்டும்
6 .சரியான முறை அணுகி சரியான கையுட்டம் கொடுத்து .பணத்தை பெறவேண்டும் .
7 .72000 கீல் வருமானம் சான்றுதல் பெற எளிய மக்கள் என்ன படு பட வேண்டும் .

மாவட்டம் 5 முதல் 8 மருத்துவமனை தான்.
51 வகை நோய்க்கு மட்டும் சிகிச்சை .கலைஞர் தமிழக முதல்வர் 11 /04/2010 அன்று அறிவுப்பு 69278 பேர் பயன் .
சுமார் ஆறு மாதத்துக்கு மேல் .30 மாவட்டம் 69278 /30 =2309
2309 /6 =384 .ஒரு மாததுக்கு சுமார் 400 நோயாளியை கையாள திறன் அற்று ஒரு மாவட்டம் முழுவதும் உள்ள மருதுவமணி உள்ளது ?.
அரசு மருத்துவமனை செய்ய முடியாயததை அந்த மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனை செய்கிறது ?
.
ஒரு ஆய்வு செயலாம் அரசு மருதுவமணி இல்லாத வசதி அந்த அரசு கூறிய 7 தனியார் மருதுவமணி என்ன உள்ளது
நோயாளி தங்கும் அரை ,அறுவை சிகிச்சை அரை ,மருத்துவர் .
scaning கருவி ரத்த சோதனை பிரான வாயு ரத்தம் .சில நுனிய கருவி .
மருத்துவர் அரசு மருத்துவமனை தான் சிரத்த மருத்துவர் இருப்பார். அப்படி இல்லாத பட்சத்தில் பணம் கொடுத்து அத மருத்துவரை அந்த அறுவை சிகிச்சை செய வைக்கலாம் .தவிர்க்க முடியாத சமயத்தில் .
மருதுவண்மனை சுத்தம் இதை சில பண செலவில் செய்து விடலாம் .
இதை எல்லாம் மனதில் வைத்து தனியார் 100000 ரூபாய் செலவு பண்ணிகிரத்தை அரசு 10000 செலவில் பண்ணிவிடலாம் .
அரசு மருத்துவமனை அந்த நோயாளியை தன்னால் குண படுத்த முடியாது என்று குறிகிறதா?அப்படி எதுவும் சான்று அளிக்கிறதா.

அரசு மருத்துவமனை மூடி தனியார் மருத்துவமனை நன்மைக்கு அரசு முயற்சி .
நோயாளி தன தொடர் சிகிச்சை தனியாரி நாட வேண்டும் முதலில் தனியார் காண்பித்தால்.
பிற உபாதைக்கும் தனியறை நாட வேண்டும்.
சில உளவியல் காரணம் முதலில் இரண்டு முறை இலவசமாக கொடுத்து பின் தன் பக்கம் இழுப்பது .
அரசு ஆண்டுக்கு 550 கோடி செலவு பண்ண தயார் என்றால் நாம் உலக வங்கி இடம் சுமார் 20000 கோடிக்கு மேல் கடன் வாங்கி அரசு மருதுவமணியை மிக சிறப்பாக ஆக்கலாம் .காப்பிடு கொடுக்கும் தொகை கடன் அடைத்து விடலாம். .ஆண்டுக்கு ஆண்டு காப்பிடு நிறுவனத்துக்கு கொடுக்கும் தொகை கூடும்.

அரசு செயுமா ?

1 comment:

தமிழ் மலர் said...

ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான சிகிச்சை இலவசம். இது தான் இதன் தாரக மந்திரம். இந்த பட்ஜெட்டில் இதற்காக 750 கோடி அறிவித்து இருக்கிறார்கள். என்ன ஓர் நல்ல ஐடியா. ஆனால் இது சரியா என்று எனக்கு தோன்றவில்லை.

எதற்காக இந்த அரசாங்க மருத்துவமனை என்ற திட்டம் நம் ஜனநாயக நாட்டில் தோற்றுவிக்கப்பட்டது? ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத்தானே? அப்புறம் ஏன், ஒரு லட்சத்திற்கு அதை சுருக்குகிறார்கள்? ஏன் என்றால், நம் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. அப்படியானால், காப்பீடு திட்டத்திற்காக செலவு செய்யும் தொகையை அரசாங்க மருத்துவமனைகளை நவீனபடுத்தி, சிறந்த மருத்துவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் போதுமே, காப்பீடு திட்டமே தேவை இல்லையே.

இப்பொழுது அரசாங்க மருத்துவமனைகள் நல்ல சிறந்த மருத்துவர்களை கொண்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு தேவையான, போதுமான வசதிகள் செய்து கொடுபதில்லை. சுற்றுபுறங்கள் சுத்தமாக வைத்து கொள்ளப்படுவதில்லை. எங்கு சென்றாலும் ஒரே துர்நாற்றம், அசுத்தம். மேலும், அக்கறையற்ற மெத்தனம் ஒவ்வொரு ஊழியரிடம். நான் எனக்கு தெரிந்த சில மருத்துவர்களிடம் பேசும்போது, நான் தெரிந்துகொண்டது, அரசாங்க மருத்துவமனைகள் நன்றாக நிர்வாகிக்கப்பட்டால், தனியார் மருத்துவமனைகளை விட இங்கே கூடம் அலைமோதும். இதை பொதுமக்கள் சிறப்பாக உபயோக படுத்துவார்கள். அப்புறம் எதுக்கு இந்த காப்பீடு திட்டம் எல்லாம்? தேவையே இல்லையே.

பட்ஜெட்டில் அறிவித்த இந்த 750 கோடியை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளை சீர்படுத்த உபயோகிப்பது ஒரு சிறந்த செயல் என்று நான் நினைக்கின்றேன். மேலும் இது போல் செய்தால், காலத்துக்கும் அழியாது கலைஞர் புகழ்.
http://www.sanandkumar.com